×

ரூ.74 லட்சம் மோசடி வழக்கில் பெண் உட்பட 2 பேர் கைது

ஆவடி: திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தைச் சேர்ந்தவர் காயத்ரி (20). அம்பத்தூர், பச்சையப்பன் பிரதான சாலையைச் சேர்ந்தவர் சத்ய நாராயணன் (38), அவரது மனைவி ஷாலினி (33), மாதவரம் சத்யமூர்த்தி நகரைச் சேர்ந்த தாமஸ் (29) ஆகியோர் காயத்ரிக்கு அறிமுகமாகியுள்ளனர். சத்ய நாராயணன், தனக்கு பல அரசியல் கட்சியினரை தெரியும், அவர்கள் மூலமாக, கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக காயத்ரியிடம் கூறியுள்ளார். அதன்படி, காயத்ரி உள்ளிட்ட 8 பேரிடம் சத்ய நாராயணன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரூ.74 லட்சம் பெற்றதாகக்கூறப்படுகிறது.

ஆனால் வேலையும் வாங்கித் தரவில்லை பணத்தையும் திருப்பித்தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த காயத்ரி, அம்பத்தூரில் உள்ள சத்யநாராயணன் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் அவர்கள் மூவரும் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து கடந்த 2021ல் காயத்திரி மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்தார். இவிசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த ஷாலினி மற்றும் தாமஸ் இருவரையும் கைது செய்தனர். மேலும் சத்ய நாராயணனை தீவிரமாக தேடுகின்றனர்.

The post ரூ.74 லட்சம் மோசடி வழக்கில் பெண் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Awadi ,Kayatri ,Trichy District, Ditraiyur Circle ,Satya Narayanan ,Chachjayappan Main Road ,Ambattur ,
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்